search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மீட்பு"

    • ஒடிசா மாநிலம் சேர்ந்தவர்
    • காப்பகத்தில் ஒப்படைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்துள்ளார்.

    சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்த ஆதார் அட்டை மூலம் இவர் ஒடிசா மாநிலம் ஜெய்பூர் அடுத்த பைடினாத் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் பாரி பந்தா என்பவரின் மகன் சத்ய ப்ராட்டா பந்தரா (வயது40) என தெரிந்தது.

    இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர் இதனையடுத்து இவரை திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் மனநலக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ×